வியாழன், 26 செப்டம்பர், 2013

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழியே!


கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன்தோன்றிய மூத்ததமிழ் என்னும் நம்முன்னோர்களின் கூற்று மிகச்சரியானதே!
ஆராய்ந்து கூற இயலாத அளவிற்கு தமிழ் மொழிதொன்மைவாய்ந்தது.
கல்வெட்டும்,புதைபொருட்களும் தமிழின் தொன்மையை ஒருவாறு உலகிற்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.
கி-மு. 10527 

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. 


உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.
12 x 18 x 100 = 21600
தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.



திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும்
பிறந்த தமிழோடும் பிறந்தோம் நாங்கள்.
- பாரதிதாசன்
உலகின் எட்டு செம்மொழிகளுள் தமிழும் ஒன்று.
உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ்; வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.
அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் செம்மொழியே என முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் அவர்கள் ஆவார்கள். தமிழ்ச் செம்மொழி என்று முதன்முதலில் சொன்ன வெளி நாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். 


மெக்ஸிகன் ஆர்க்கியாலஜி என்னும் புத்தகத்தை எழுதிய ராமோன் மெனா என்னும் அறிஞர், நஹுஅல், சாபொடெகா மற்றும் மாயன் கலாச்சார மொழிகள் இந்தியாவில் இருந்து உருவானது என்று தம்முடைய மொழி ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது


. உலகிற்கு இந்தியா கொடுத்த இரண்டு மாபெரும் மொழிகள், தமிழும் சமஸ்கிருதமும். மேற்கத்திய மொழிகள் அனைத்தும் இந்த இரண்டு ஆதி மொழிகளில் இருந்து உருவானது தான் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். 


அழகான கவிதைகள் சிறந்த – உயர்ந்த இலக்கியத் தகுதிகளோடு பாடப்பட்டுள்ளன. தமிழில் எழுத்து வடிவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. வடமொழிக் கல்வெட்டுக்களைவிட தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் மிகப்பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் எழுத்து வடிவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூல மொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். 



இது போல இந்திய கலாச்சார சுவடுகளும் நடைமுறைகளும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல மூலைகளிலும் நிலைப்பெற்றுள்ளன. ஆரியர்களின் (இங்கே ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுவது இந்தியர்களைத் தான். மேலும் இது குறிப்பாக தென்னிந்தியர்களையே குறிக்கும்) அங்கீகாரம் பெறத் தொடங்கின. “The Story of India” என்ற தலைப்பில் வெளிவந்த இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வுப் படத்தில் மைக்கல் வூட்ஸ் (Michael Woods) என்னும் அறிஞர் தென்னிந்தியாவை “வாழும் நாகரீகம்” என்று இன்றளவும் இந்திய நாகரீகம் பேணிக் காக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.



பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதழ் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிரிட்டனில் வெளியாகும் தி மிரர் நாளிதல் வெளியிட்ட செய்தி ” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தான் தோன்றின.” என்று குறிப்பிடுகிறது.

ஜப்பான்,எதியோப்பியா,இஸ்ரெல் சீனா போன்ற அநேக நாடுகளில் தமிழ்பெயர்கள் வழங்கி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டு பழமையானது என்பது தெளிவாகியுள்ளது.உலகில் எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் தமிழ் நாகரிகம்தான்பது பல ஆராய்ச்சிகளின் மூலம்..நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.
இன்கா , மாயன் நாகரிகங்களும் தமிழ் நாகரிகங்களே என அறியப்படுகிறது.


2 கருத்துகள்:

  1. தமிழ் நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் உலகத்தின் மொழிகளுக்கு தாய் மொழி என் தமிழ் மொழி

    பதிலளிநீக்கு