பிரண்டை(ஆஸ்டியோபோரோசிஸ் தவிர்க்க)

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு தாது மற்றும் அடர்த்தி குறைந்து எலும்பு புரை அல்லது எலும்பு வலுவிழப்பு நோயாகும். இது எலும்பு வலிமை குறைவதற்கு வழி வகுக்கும். இது எலும்பு முறிவு ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நோய் அறிகுறிகள் அற்றது. 

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பே இது ஏற்பட ஆரம்பித்துவிடும். வயதான ஆண்களுக்கும் ஏற்படும். 

பிரண்டை
:

வஜ்ரவல்லி என்பது இதன் பெயர்.ஆங்கிலத்தில் இதை Bone setter என்று கூறுவார்கள்.பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வஜ்ரம் போல் வலிமைஆகும்.

ஆஸ்டியோபோரோஸிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைவு நோயை பிரண்டை தடுக்கும். எலும்புகள் வலுவாக்கும்.உடலை சுறுசுறுப்பாக ஆக்கும். 

மூட்டுகள் தேய்வதையும் தடுக்கும்.

எலும்பு முறிவுக்கு பிரண்டையை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் எலும்பு கூடும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

வலைதளங்களில் இப்போது நம்பகமான நிறுவனங்களின் ஆயுர்வேத பிரண்டை மாத்திரைகள் கிடைக்கின்றன. Available here

வயிற்றுப்புண் நீக்கும்.மூலம் ரத்தமூலம் போன்ற நோய்களை குணமாக்கும்.உடல்

இளைத்திருக்கும் குழந்தைகளுக்கு இளம் பிரண்டையை வாரத்தில் 2,3 நாட்கள் ,காலையில்  நெய்யில் வதக்கி அரைத்து சிறு நெல்லிக்காயளவு பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் உடல் தேறி பலம் பெறுவார்கள்.

அடிபட்ட வீக்கம் வலி முதலியவற்றுக்கு  பிரண்டையை வதக்கி
அரைத்து பூச  நிவாரணம் கிடைக்கும்.

புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்துகளில் பிரண்டையும்  சேர்ந்திருக்கும்.

பிரண்டை இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பை நீக்கி இரத்த ஒட்டத்தை சீராக்கி இதயத்தை பலப்படுத்தும்.

இது உஷ்ண குணமுள்ளது. அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உட்கொள்ளலாம்.எலும்புப் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயன்படுத்தலாம். 

கள்ளிச்செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை உபயோகப்படுத்தக்கூடாது.

பிரண்டையில் ஒலைப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை, முப்பிரண்டை,சதுரப்பிரண்டை களிப்பிரண்டை,தீம்பிரண்டை,புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன.

பிரண்டை தோலை சுற்றிலும் நீக்கி  உள்ளிருக்கும் சதையை எண்ணெயில் வதக்கியபின்பே உபயோகிக்க வேண்டும். 

பிரண்டை துவையல்:

பிரண்டையை தோல் நீக்கி ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து 1ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்க்க வேண்டும். பின் கருவேப்பிலை, வரமிளகாய்3, சிறிய வெங்காயம் 10, பூண்டு பல்2, சேர்த்து வதக்கவும். பின் தேங்காய் துருவல் 2 ஸ்பூன், சுண்டைக்காயளவு புளி, தேவையான உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி ஆறவைத்து துணையாக அரைக்கலாம்.இதை சாதம், இட்லி தோசை சப்பாத்தி முதலியவற்றுடன் சாப்பிடலாம். 

பிரண்டை தொக்கு:

பிரண்டை தோல் நீக்கி சுத்தம் செய்தது-ஒரு கைப்பிடி.. புளி-25 கிராம். தாளிக்க-கடுகு, வெந்தயம், பெருங்காயம் தலா அரை ஸ்பூன். மஞ்சள் தூள் அரை ஸ்பூன்.மிளகாய்த்தூள் அரை ஸ்பூன். உப்பு- தேவையான அளவு. வெல்லம் பொடித்தது 1 ஸ்பூன். நல்லெண்ணெய் 50 மில்லி. 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளிக்கவும். பின் சுத்தம் செய்த பிரண்டையை சேர்த்து பிரண்டை பொன்னிறமாகும்  வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய் தூள். மஞ்சள் தூள். வெல்லம், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும். 

பிரண்டைப் பொடி:

சுத்தம் செய்த பிரண்டை 15.து.பருப்பு 50 கிராம். பெருங்காயம் சிறிது. மிளகாய் வற்றல் 4.உப்பு தேவையான அளவு. புளி சுண்டைக்காயளவு. 
வெறும் வாணலியில் பருப்பு,பெருங்காயம்,புளி,உப்பு ஆகியவற்றை வறுக்கவும்.பிரண்டையை மிகச் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். 

பிரண்டை ரசம்:

சுத்தம் செய்து எண்ணெயில் பொன்னிறமாக வதக்கிய பிரண்டை 10 . இதை அரைத்து ரசம் வைக்கும்போது சேர்க்கலாம். 

போன்ற உணவுகள் மூலம் பிரண்டையை சாப்பிட எடுத்துக் கொள்ளலாம். 

பிரண்டையை நல்லெண்ணெய், கடுகு எண்ணெயுடன் காய்ச்சி உடலில் ஏற்படும் வலிகளுக்குத் தேய்க்கலாம்.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்,பால்கனி தோட்டத்தில் கூட சிறு தொட்டிகளில் பிரண்டை யை வளர்த்துப் பயனடையலாம். பிரண்டை கணுவை கிள்ளி வைத்து புதிய பிரண்டை கொடிகளை உருவாக்கலாம். இதற்கு உரங்கள் எதுவும் தேவையில்லை. வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் நன்கு வளரும். 

முடிவுரை:
எலும்புப்புரை நோய் வருமுன் 
காப்பதற்குத்தான் இக்கட்டுரை. உணவே மருந்தாகவும், சரியான நேரத்தில் உணவு உண்ணுவதன் மூலமும்,ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதன் மூலமும் பல நோய்கள் நம்மை தாக்காமல் வாழலாம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக