நவராத்திரி என்றால் என்ன?எளியவழியில் நம் பாரம்பரியத்தை மறக்காமல்கொண்டாடுவது எப்படி?
நம் இந்தியாவில்... இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இந்தியர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி.நவராத்திரி என்பது(செப்டம்பர் அல்லது அக்டோபர்) புரட்டாசி அமாவாசையின் பின் வரும் ஒன்பது நாட்கள் அம்பிகையின் வழிபாடு ஆகும்.இது துர்க்கை,லட்சுமி,மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் வடிவங்களை வழிபடுவதாகும்.
இந்த நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை பூஜித்து கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அல்லது ஆயுத பூஜை என்று கொண்டாடப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலைத் தோரணங்கள்,பண்டிகைக்கான சிறப்பு உணவுகள்,கோலங்கள், பூஜைகள் என நவராத்திரி கொண்டாட்டம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும்.
வண்ணக்காகிதங்கள், கலைப்பொருட்கள், உணவுப்பொருட்கள்,உடைகள், பரிசுப்பொருட்கள் என விற்பனை அதிகமாக இருக்கும். வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள், வேலை செய்யும் இடங்கள் என ஆயுதபூஜை நம் நாட்டில் மிகச்சிறப்பாகக் கொண்ட்டப்பட்டு வருகிறது.
இதனால் சந்தைப்படுத்துதல் அதிகமாகி நாட்டில் பொருளாதாரம் நிலை நிறுத்தப்படுகிறது.
விஜயதசமியன்று குழந்தைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்க அட்சராப்பியாசம் என்ற சடங்கு பின்பற்றப்படுகிறது.நெல்லை தாம்பாளத்தில் பரப்பிஅதில் எழுத்துக்களை விரலால் எழுதி பிள்ளைகள் நன்கு படித்து மேன்மைக்கு வர நமஸ்தம் செய்வார்கள். கல்விக்கும் சகல கலைகளுக்கும் தெய்வமாக விளங்குபவர் சரஸ்வதிதேவி. அதனால் மக்கள் தங்கள் எந்த புதிய முயற்சிக்கும் அடி எடுத்து வைக்கும் விதமாக விஜயதசமி நாளன்று பூஜை செய்து தொடங்குவர்.
கொலுப் படி அமைத்தல்: கொலு அமைத்தல் என்பது நம்முடைய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும்.ஒன்பது படிகளை அமைத்து அதில் மேலிருந்து முதல் படியில் தெய்வங்கள், இரண்டாம்படியில் அவதாரங்கள், மூன்றாம் படியில் ஞானிகள், நான்காம்படியில் மனிதர்கள், ஐந்தாம்படியில் விலங்குகள், ஆறாம்படியில் பறவைகள், ஏழாம்படியில் தாவரங்கள், எட்டாம் படியில்பூச்சிகள், ஒன்பதாம்படியில் காய்கறிகள் என்று வரிசைப்படுத்தி வைப்பார்கள்.கொலு பொம்மை வாங்க
குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தையும் ஆன்மீகத்தையும் விளக்க அரிய வாய்ப்பு. இந்த ஒன்பது நாட்களில் தினமும் இதிகாசக் கதைகளையும் , சுலோகங்களையும் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதன்மூலம் குழந்தைகள் பக்தியுடன் பண்புள்ளவர்களாகவும் வளர்வார்கள். இதிகாசக் கதைகளின் காட்சிகள், மரப்பொம்மைகள், தமிழ் பாரம்பரியக் கதைகள், கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் அமைப்புகள் என பலவகையான வடிவங்களில் கொலு அமைக்கலாம். இன்று நம்மிடம் எளிமையான பொருட்களும் குறைந்த இடமும் இருந்தாலும், ஒரு சிறிய தட்டில் சில பொம்மைகள் வைத்து கொலு வைக்கலாம்.நாமே சொந்தமாக செய்த கைவினைப்பொருட்களையும் வைக்கலாம். நவராத்திரி கலைகளுக்கும் கலைஞர்களுக்குமான வாய்ப்பு.
ஒன்பது நாட்களுக்கு தினமும் நம்மால் முடிந்த பிரசாதங்கள் சுண்டல், பொங்கல் போன்றவை காலையும் மாலையும் எளிமையாகச் செய்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்துக் கொடுக்கலாம். மனிதர்களுடன் அன்பாகப்பழகும் வாய்ப்பை நவராத்திரி கொலு பண்டிகை ஏற்படுத்துகிறது.வெற்றிலை பாக்கு ,மஞ்சள் குங்குமம், ரவிக்கைத் துண்டு அல்லது ஏதேனும் ஒரு பரிசுப்பொருள் என தனது அக்கம்பக்கத்து பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துபரிசுப்பொருட்கள் வழங்கி உறவை மேம்படுத்தலாம். இங்கே க்ளிக் செய்யவும்(affiliate)
சிறு குழந்தைகளின் கொலு கொண்டாட்டம்:
சிறு குழந்தைகளை கொலுவில் ஈடுபடுத்தி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். அவர்களின் திறமையும் எண்ணங்களின் வெளிப்பாடும் நமக்குத் தெரியவரும்.கொலுப்படிகளை அமைக்க உதவுவது தானியங்களை முளைக்க வைத்து சிறு கிண்ணங்களில் கொலுப்படிகளில் வைப்பது, பூங்காக்கள் அமைப்பது,களிமண் , அல்லது செயற்கைக் களிமண் வைத்து பூக்கள் காய்கறிகள் பழங்கள், பொம்மைகள் செய்வது, முதலியவற்றை குழந்தைகளின் மூலமாகச் செய்யும்போது அவர்களின் கைத்திறனும் அறிவும், கற்பனைத்திறனும் மேம்படும்.
நம்மிடம் சிறிய இடம் இருந்தாலும் ,எளிமையான பொருட்களை வைத்து அலங்கரித்து தட்டில் வைத்துக்கூட கொலுப் பண்டிகை கொண்டாடலாம்.
நவராத்திரி விரதம்:
விரதம் இருக்கும் நாட்களில் மனதையும் உடலையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நவராத்திரியில் சிலர் ஒருவேளை விரதமிருப்பார்கள் சிலர் முழு விரதம் இருப்பார்கள். நீராகாரம், பழங்கள் காய்கறிகள் என சாத்வீகமான உணவையே விரத நாட்களில் எடுத்துக்கொள்ளப்படும்.வட இந்தியாவில் துர்கா பூஜை, மேற்கு வங்கத்தில் காளி பூஜை,கர்நாடகாவில் தசரா ,தமிழ்நாட்டில் ஆயுத பூஜை என நவராத்திரி நாடெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது .
முடிவுரை:
நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் மூதாதையர்களின் அனுபவமும் அறிவும் நிறைந்த வழிகாட்டியாகும். நவராத்திரி பண்டிகையின் மூலம் பக்தியும், பாரம்பரியமும், சக மனிதர்களிடையே ஒற்றுமையும் அன்பும் வளரும். நலங்களையும் சகல சொபாக்கியத்தையும் அள்ளித்தரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுவோமாக!click here(affiliate)
இந்த நவீன காலத்திலும் மரபை மறக்காமல் வாழ்வதுதான் உண்மையான பண்பாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக