ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த காகம் ஒரு வடையைக் கவ்விக் கொண்டு சென்றது.
காகம் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து வடையைச் சாப்பிட முற்படும்போது ஒரு நரி வந்தது. வடையை அபகரிக்க எண்ணிய தந்திரக்கார நரி காகத்தைப்பார்த்து பேச ஆரம்பித்தது.
காகமே!காகமே! உன் குரல் மிக அழகாக இருக்கிறது. அதைக் கேட்கவே ஆவலாக வந்தேன். தயவுசெய்து எனக்காக ஒரு பாட்டுப் பாடு என்றது!
காகம் பாட்டுப் பாட வாயைத் திறந்தால் வடை கீழே விழுந்து விடும். தான் எடுத்துக் கொண்டு ஓடி விடலாம் என நினைத்தது.
.jpg)
2.இதே கதையை இன்னொரு முறையிலும் கூறப்படுகிறது.
அதாவது நரி காகத்தைப்பார்த்து பாடச்சொல்லியதும் காகம் மிகவும் மகிழ்ந்து உடனே வாயைத்திறந்து பாடியது. வடை கீழே விழுந்தது. நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
நரி பாடச் சொல்லியது ம் மகிழ்ந்து போய் யோசிக்காமல் பாடிய காகம் வடையை இழந்து ஏமாந்தது.
கதை சொல்லும் நீதி:
குழந்தைகளே!
நம்மை ஏமாற்ற நினைப்பவர் நம்மிடம் இல்லாத தகுதியைச் சொல்லி புகழ்ந்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏமாந்து நம் பொருளை இழக்க நேரிடும்.
வீண் புகழ்ச்சிக்கு அடிமையாகி ஏமாறக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக