வேப்பம்பூவின் நன்மைகள் என்ன?
வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டது. வேப்பமரம் என்றாலே இலை,பட்டை, வேர்கள்,பூக்கள், கொட்டைகள், எண்ணெய் என எண்ணற்ற நன்மைகள் உடல் நலத்திற்காக உண்டு.செலவில்லாமல் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடியது.
தமிழ் நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும் , ஆந்திர மாநிலத்தில் யுகாதி அன்றும் வேப்பம்பூ ரசம் அல்லது வேப்பம்பூவுடன் வெல்லம், வாழைப்பழம் கலந்து பிரசாதமாக உண்ணத் தரப்படுகிறது.நமக்கு உடலில் ஏற்படும் வாத, பித்த,கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளை சமன் படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது.வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும்,எதிர்ப்புச் சக்தியை கூட்டவும் உதவி செய்கிறது
மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் பூக்கும் வேப்பம் பூக்களை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொண்டால் வருடம் முழுதும்பயன்படுத்தலாம்.வேப்பம்பூவின் பயன்கள் என்னென்ன எனப் பார்க்கலாம்.வேப்பம்பூவைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?அறு சுவைகளில் கசப்புச்சுவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை. மற்ற கசப்புப் பொருள்களை விட வேப்பம்பூவில் மிதமான கசப்புச்சுவை இருப்பதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வேப்பம்பூ சாதம்:
எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் தாளித்து 1ஸ்பூன் வேப்பம்பூவையும் சேர்த்து வதக்கி சாதம் கிளறி சாப்பாட்டுக்குமுன் 2,3 களம் சாப்பிடலாம்.
வேப்பம்பூ ரசம்:
தினமும் வைக்கும் தக்காளி ரசம், புளிசேர்த்து வைக்கும் ரசத்தில் 1 ஸ்பூன் வேப்பம்பூக்களை சேர்க்கலாம்.
வேப்பம்பூ சாதப்பொடி:
பருப்பு சாதப்பொடி தயார் செய்யும் போது உலர் வேப்பம்பூக்களை சேர்த்து அரைத்து வேப்பம்பூ சாதப்பொடி தயார் செய்யலாம்.சாதப்பொடியுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
வேப்பம்பூ பச்சடி:
வாணலியில் சிறிது எண்ணய்விட்டு கடுகு தாளித்து வேப்பம்பூவை தக்கி தயிரில் சேர்த்தால் தயிர்ப்பச்சடி.
வேப்பம்பூ வற்றல்:
வேப்பம்பூவை உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் வேப்பம்பூ வற்றல் ஆகும். இதை வற்றல் குழம்பாக செய்யலாம்.
வேப்பம்பூ கஷாயம்:
நீரில் வேப்பம்பூக்களைப்போட்டுக் கொதிக்கவைத்தால் கஷாயம் .
என பலவிதங்களில் உணவில் சேர்த்து பலனடையலாம்.
வேப்பம்பூ பதப்படுத்துதல்:
உலர் வேப்பம்பூக்கள்:
வேப்பம்பூவை சேகரித்து நன்கு நீரில் அலசி நீரை வடித்துவிட்டு ஒரு பருத்தித் துணியில் பரப்பி நிழலில் மொறுமொறுவென்று உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை கண்ணாடி கலனில் இறுக மூடி வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வலி பிரச்சினைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேப்பம்பூ கஷாயம் சிறந்த பலனைத் தரும்.
ஒரு டம்ளர் நீரில் ஐந்து வேப்பம்பூக்களைப்போட்டு பாதியாகச் சுண்டவைத்து கஷாயம் தயாரிக்க வேண்டும்.
வேப்பம்பூ நான்கு அல்லது ஐந்தை சிறிதளவு வெல்லம் சேர்த்து மென்று தின்றால் பித்தம் நீங்கும்.உடல் எடை குறையும்.
வேப்பம்பூவில் புரதம்,கார்போஹைட்ரேட்டுகள்,கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி , நார்ச்சத்து ஆகிய சத்துகள் இருப்பதால் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது.வேப்பம்பூவில் வெப்பகுணம் இருப்பதால் அதிக கலோரிகளை எரித்து எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உண்டான ஹார்மோனை தடுக்க உதுவுவதால் தினமும் ஒரு ஒரு ஸ்பூன் புதிதாகப்பறித்த வேப்பம்பூக்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.அழகான சருமம் பெறலாம்.
கசப்புத்தன்மையுடன் இருக்கும் வேம்பம்பூ வெப்பத்தன்மையும் கொண்டது. மலக்குடலில் இருக்கும் பூச்சிகள் வெளியேற வேப்பம்பூ சிறப்பாகச் செயலாற்றும். இனிப்பு அதிகம் சாப்பிடும் குழந்தைகள் அதிகமாக வயிற்றுப்பூச்சி தொல்லைக்கு ஆளாகும் .ஐந்து வேப்பம்பூக்களை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பூச்சித்தொல்லை,வயிற்றுவலி நீங்கி நலம் பெறுவார்கள்.
வயிறு சுத்திகரிக்க பெரியவர்கள் மாதம் ஒருமுறை உலர் வேப்பம்பூக்களை பொடியாக்கி மேரில் கலந்து கொடுத்து வர வேண்டும்.
உணவில் வேப்பம்பூக்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம்,சருமப்பிரச்சினைகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும்.கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.வேப்பம்பூ ரத்தத்தை சுத்திகரிப்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை நம் உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
வேப்பம்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைலி, காைதுவலி நீங்கும்.
தலைமுடி அடர்த்தியாக வளர வேப்பம்பூவை கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் பரபரவென தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கி தலைமுடி அடர்த்தியாக மாறும்.இளநரை மாறும்.வாரத்தில் ஒருமுறை சில வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும்.
குறிப்பு: உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வேப்பம்பூவை மிகக்குறைவாகப் பயன்படுத்தவும். கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.