முதலையும் குரங்கும்: சிறுவர் நன்னெறிக் கதைகள்
ஒரு அழகிய காட்டில் ஆற்றங்கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த நாவல் மரத்தில் ஒரு குரங்கு வசித்து வந்தது.அது தினமும் நாவல் பழங்களை ருசித்துச் சாப்பிடுவதை ஆற்றில் வாழ்ந்த முதலை தினமும் பார்த்துக்கொண்டிருந்தது.குரங்கும் முதலையும் நண்பர்களாயினர்.
குரங்கு தினமும் முதலைக்கும் நாவல் பழங்களை உண்ணக் கொடுத்தது. நண்பர்கள் இருவரும் நாவல் பழங்களை தினமும் ருசித்து மகிழ்ந்தனர்.
நாவல் பழங்களை தினமும் சாப்பிட்ட முதலை தனது மனைவிக்கும் நாவல் பழத்தைக் கொண்டுபோய் தர ஆசை கொண்டது. குரங்கிடம் கேட்டு தனது மனைவிக்கும் நாவல் பழங்களை ருசிக்கக் கொடுத்தது.
நாவல் பழங்களைச்சாப்பிட்ட பெண் முதலை "இவ்வளவு ருசியாயிருக்கும் நாவல் பழங்களைச் சாப்பிடும் குரங்கை சாப்பிட்டால் எவ்வளவு ருசியாயிருக்கும் என எண்ணியது. தனது ஆண் முதலையிடம் "உடனே அந்தக் குரங்கைக் கொண்டு வா.நான் அதை ருசிக்க வேண்டும் "எனக் கூறியது.ஆண் முதலை நண்பனை எப்படி கொல்வது என எவ்வளவோ மறுத்துப்பார்த்தது.பெண் முதலை எனக்கு உடல் பலஹீனமாயிருக்கிறது.குரங்கின் இதயத்தைச் சாப்பிட்டால்தான்சரியாகும் என நாடகமாடியது.ஆண் முதலை"சரி குரங்கை அழைத்து வருகிறேன்" எனக் கூறிச் சென்றது.
குரங்கிடம் திரும்பி வந்த முதலை "ருசியான நாவல் பழங்களைக் கொடுத்த உனக்கு என் மனைவி விருந்து கொடுக்க அழைக்கிறாள்"எனக்கூறி முதுகில் ஏற்றி அழைத்துச் சென்றது.
அவர்கள் இருவரும் ஆற்றின்பாதி தூரத்தைக் கடந்தபிறகு..முதலை பேசத் தொடங்கியது."எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..ஆனால் என் மனைவி மிகவும் சுகவீனமாக இருக்கிறாள்,தன்னைக் குணப்படுத்துவதற்கு ஒரு குரங்கின் இதயம்தான் மருந்து என அவள் உறுதியாக நினைக்கிறாள்.உனைக் கொன்று தின்பதைத்தவிர வேறு வழியே இல்லை.இனி உன்னோடு பேசி மகிழ முடியாது"என வருத்தத்துடன் கூறியது.
முதலையும் குரங்கின் வார்த்தையை நம்பி விட்டது. நீந்தும் திசையை மாற்றி மறுபடியும் அந்த நாவல் மரத்தை நோக்கிச் சென்றது. சட்டென்று குரங்கு தாவிச் சென்று மரத்தின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விட்டது.
குரங்கு பேசத் தொடங்கியது, "முட்டாள் முதலையே இதயத்தை உடலில் இருந்து எடுத்து காயப்போடமுடியாது என உனக்குத் தெரியாதா? உன்னை இனி நான் ஒருபொழுதும் நம்ப மாட்டேன், இந்த மரத்தில் இருந்து பழங்களையும் பறித்துத் தர மாட்டேன். இனி நீ என் நண்பனில்லை.என் முகத்தில் விழிக்காதே!" எனக்கூறி மரத்தில் ஏறிச் சென்று விட்டது.
முதலை தான் முட்டாளாக மாறியதை உணர்ந்தது.ஒரு நல்ல நண்பனையும் இனிய,சுவையான நாவல் பழங்கள் கிடைப்பதையும் இழந்துவிட்டேனே என வருந்தியது.அந்தக் குரங்கு சாதுர்யமாகவும் துரிதமாகவும் சிந்தித்த காரணத்தால்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
நீதி: அறிவும் சமயோசித புத்தியும் நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக