பிரசவித்த தாய்மார்கள் நலன் பேணுவது எப்படி

(படம்  AIமூலம் உருவாக்கப்பட்டது)

பிரசவித்த தாய்மார்களின் நலன்
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான போற்றத்தக்க கால கட்டமாகும்.இந்த அற்புதமான கட்டத்தில் சில உடல் மாற்றங்களும், மன மாற்றங்களும் இயல்பாகவே ஏற்படும்.பிரசவித்த பிறகு தாய்மார்களின் உய்ல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் எப்படி பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடல் மாற்றங்கள்:

  • கருப்பைச் சுருக்கம்: குழந்தையின் அளவுக்கேற்றவாறு விரிந்து பெரிதாகிய கருப்பை முந்தைய அளவுக்குச் சுருங்க சில வாரம் எடுக்கும்.

  • இரத்தப்போக்கு: பிரசவத்திற்குப் பின்  சில நாட்களுக்கு இரத்தப்போக்கு இருப்பது இயல்பு.

  • தையல்: பிரசவத்தின் போது தையல் போடப்பட்டிருந்தால், அது ஆற நேரம் எடுக்கும்.

  • முலைக்காம்புகள்:பிறந்த குழந்தை பால்குடித்துப்பழக இரண்டொரு நாள் ஆகலாம்.அப்போது பால் சுரப்பு அதிகரிப்பதால் முலைக்காம்புகள் வலிக்கலாம் மற்றும் விரிசல் ஏற்படலாம்.இதற்க்கு க்ரீம்களை மருத்துவர் பரிந்துரைப்பார்.

  • மலச்சிக்கல்: பிரசவத்தின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் மாற்றங்கள்  உணவு மற்றும் மருந்துகளின் விளைவால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

  • தொற்று: சில சமயங்களில் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்றுக்கள்  ஏற்பட வாய்ப்புள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மன மாற்றங்கள்:

  • பிறப்புக்கு பிந்தைய மனச்சோர்வு: சில தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப்பின்   மனச்சோர்வு ஏற்படலாம். இது சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய ஒரு நிலை.கணவரும் குடும்பத்தாரும் அனஅபும் அரவணைப்பும் காட்டுவதால் தாய்மார்கள் எளிதில் இப் பிரச்சினையைக் கடந்து வருவார்கள்

  • உடல் மாற்றங்களால் ஏற்படும் மன உளைச்சல்:         
  •          தூக்கமின்மை  உடல் சோர்வு, குழந்தைப்பராமரிப்பு அதிகநேரம் அமர்ந்துகொண்டு பாலூட்டுதல் ,பிரசவித்ததால் ஏற்பட்ட புண்களின் வலி ,உடல் எடை அதிகரிப்பு, தோல் பிரச்சினைகள் போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

பிரசவித்த தாய்மார்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

  • சரியான உணவு:  பிரசவித்த தாய்மார்கள் சரியான நேரத்துக்கு உணவு எடுக்க வேண்டும். குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டும் தேவையிருப்பதால் தாய்க்கும் அடிக்கடி பசிக்கும்.இடையில் ரொட்டி, பால் , கஞ்சி முதலியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.பால் சுரப்பு அதிகரிக்கவும், உடல் சக்தி பெறவும் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.பிரசவ லேகியம் என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கிறது.சுக்கு,மிளகு,பைண்டு, சீரகம், கருப்பட்டி சேர்த்த பிசவ லேகியம் எடுத்துக்கொள்வதால் பால் சுரப்பு நன்கு இருக்கும், மலச்சிக்கல், அஜீரணம் முதலிய தொந்தரவுகளும் இல்லாமல்  உடல் மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப உதவும்.
         பாலூட்டுதல்: 
  1.                    சரியான நிலலையில் அமர்ந்து பாலூட்ட வேண்டும். 
  2. இதை மருத்துவரே  பரிந்துரைத்திருப்பார்.இல்லையெனில் பிற்பாடு முதுகுவலி வரக்  காரணமாகிவிடும்.சரியான அளவில் குழந்தைக்குத் தேவையான அளவில் பால் சுரப்பு இல்லையெனில் மருத்துவரை அணுகவும்.வீட்டு வைத்தியமான சிலவற்றைக்கூட பின்பற்றலாம். பூண்டு 10 பற்களை பாலில் வேகவைத்துக் குடித்தால் பால் நன்கு ஊறும். முருங்கைக்கீரை சூப் குடிக்கலாம்.காளான் சாப்பிட்டால் பால் சுரப்பு குறையுமென கிராமத்துப்பக்கங்களில் பாட்டிமார்கள் அறிவுறுத்துவார்கள்.
           ஓய்வு : குழந்தை பராமரிப்புடன் சேர்த்து போதுமான அளவு                               தூங்க வேண்டும்.ஓய்வு, அமைதியான சுற்றுப்புறம்                                         மற்றும் அமைதியான மனநிலை தேவை.  

         தொற்று தடுப்பு: மருத்துவரின் அறிவுரைப்படி தையலபகுதியை                   சுடுநீரில் சுத்தம் செய்து மருந்துகள் தடவி சுத்தமாக                                       வைத்துக்கொள்ள வேண்டும்.

          மருத்துவரை அடிக்கடி சந்திக்கவும்: எந்தவொரு பிரச்சினையும்                        ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

        உதவி கோருதல்: உறவினர் மற்றஉம் நண்பர்களிடம் உதவிகள்                    கோர தயங்க வேண்டாம்.

சிறிய அளவில் யோகா, தியானம், மற்றும் நடைப்பயிற்சி செய்யலாம்.
பாரம்பரிய முறைகளில் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
எளிமையான புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூப்புகள், சூடான பானங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு கிடைக்கும் ஆதரவு:.


குடும்பத்தினர் மற்றஉம் நண்பர்களின் அன்பும் ஆதரவும் மிகவும் முக்கியம்.

மருத்துவர் வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையின்படியே நடக்க வேண்டும்.

பால் ஊட்டும் ஆலோசகர்: பால் கொடுப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.

மனநல மருத்துவர்: 

பிறப்புக்கு பிந்தைய மனச்சோர்வு ஏற்பட்டால் மனநல மருத்துவரை அணுகலாம்

   முடிவுரை:
      பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் உடல் மற்றும் மன                           ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். சரியான                        உணவு,   போதுமான ஓய்வு, மருத்துவரின் ஆலோசனை மற்றும்                குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவை இதற்கு அவசியம்.

குறிப்பு: இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே. எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


Disclaimer: This information is for general knowledge and informational purposes only, and does not constitute medical advice. Always consult your doctor for any health concerns.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக